பிரதேச மட்ட சிறுவர் பாதுகாப்பு குழுக்கூட்டம் 14.03.2022 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பொலிஸ் அதிகாரிகள், தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், சிறுவர் இல்ல நிர்வாகி மற்றும் கிராம அலுவலர்கள், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இக் கலந்துரையாடலில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக குறித்த தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது.
|
![]() |
|
















