மூன்றாவது கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் 17.09.2025 அன்று காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர்
திரு.F.C சத்தியசோதி அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு.செ.ரமேஸ்குமார் மற்றும் பிரதேச செயலக கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், முகாமையாளர் சமுர்த்தி தலைமைப்பீடம், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் பிரதேச செயலகத்தின் நிதி, நிர்வாக செயற்பாடுகள் நிதி பிரமாணங்கள், தாபன விதிக் கோவைகளுக்கமைவாக உள்ளக கட்டுப்பாட்டினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொதுக்கணக்காய்வு ஐயவினாக்களைக் குறைத்து கொள்ள முடியும் என்பதோடு பொது மக்களிற்கு சிறந்த சேவையினை வழங்குகின்ற நிறுவனமாக செயற்பட முடியும் என பிரதேச செயலாளர் அவர்கள் குறிப்பிட்டார். மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் கருத்து தெரிவிக்கையில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் நிதி அறிக்கைகள் உடனுக்குடன் கிடைக்கப்பெறுவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.மேலும் பிரதேச செயலக நிதி ஒதுக்கீடுகள் மற்றும் செலவீனங்கள் தொடர்பான முன்வைப்பானது கணக்காளர் அவர்களால் முன்வைக்கப்பட்டது.
 
 548900171 1988762165311405 1652239338210224681 n 548184721 1988762161978072 3764626993416669822 n 

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top