தென்மராட்சி பிரதேச மட்ட விளையாட்டு விழா 2025.08.11 ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக வடமாகான விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் திரு பா.முகுந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலகத்தின் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு க.விஜிதரன் அவர்களும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் அதிபர் திரு பொ.நடேசலிங்கம் அவர்களும்கௌரவ விருந்தினராக மாகாண நீளம் பாய்தல் சாதனையாளர் திரு நா. நிதுயன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
![]() |
![]() |

















