சமுர்த்தி திணைக்களத்தின் மூன்று தசாப்த கால நிறைவினை முன்னிட்டு 01.சர்வதேச சுற்றாடல் தினம் 02.போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் நான்கு சமுர்த்தி வங்கிகளிற்கு உட்பட்ட பிரதேசங்களில் மரநடுகை நிகழ்வு மற்றும் சிரமதான நிகழ்வு மற்றும் மக்கள் மத்தியில் போதை பாவனை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், போதை தடுப்பு பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர், சுகாதார பரிசோதகர், கிராமமட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், CBO தலைவர்கள், பொதுமக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.















