தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குடும்ப வலுவூட்டல் வேலைத்திட்டம் 3 ம் கட்டம் - குடும்ப உள வலுப்படுத்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு பிரதேச செயலக கணக்காளர் தலைமையில் 27.05.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கணக்காளர், வளவாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். 60 கிராம பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்களிற்கு விளக்கமளிக்கும் இந் நிகழ்வில் வளவாளர்களாக மாவட்ட செயலக உளவளத்துணை பிரிவு உத்தியோகத்தர்களான திரு.N.உதயகுமார், திரு.க.தர்மசேகரம் அவர்கள் சிறந்த முறையில் விளக்கமளித்தார்கள்.

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குடும்ப வலுவூட்டல் வேலைத்திட்டம் 2 ம் கட்டம் - குடும்ப அபிவிருத்தித்திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு தலைமையக முகாமையாளர் தலைமையில் 22.05.2025 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வளவாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். 60 கிராம பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்களிற்கு விளக்கமளிக்கும் இந் நிகழ்வில் வளவாளராக நல்லூர் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திரு.தி.சந்திரகாசன் அவர்கள் சிறந்த முறையில் விளக்கமளித்தார்.

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top