கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் உள்ளூராட்சி அமைச்சின் வழிநடத்தலில் வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கொழும்பு என்பன இணைந்து நடாத்தும் "வீதி ஒழுங்குகளை பேணி பாதுகாப்பாக பயணிப்போம்" எனும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை இம்மாதம் 08,09 ஆம் திகதிகளில் கைதடி மாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்..
















