யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2022.03.20 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்தியநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ( பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, இராஜாங்க கமத்தொழில் அமைச்சின் உதவி செயலாளர், யாழ்.மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், பிரதேச செயலாளர்கள், துறைசார் உத்தியாகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.
|
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |





















