கிராம சக்தி கருத்திட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் கெளரவ பாரளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2019.05.28 ம் திகதி செவ்வாய் கிழமை பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சக்தி சங்க அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.















