மது பிரிவில் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ரூபாய் 2 மில்லியன் பெறுமதியான வீடமைத்தலுக்காக கட்டம் III ல் தெரிவு செய்யப்பட்ட 27 குடும்பத்தினருக்கான முதலாம் கட்ட கொடுப்பனவு காசோலை வழங்குதலும் மற்றும் வீடமைத்தல் வழிகாட்டல் அறிவுறுத்தல் வழங்குதலும் 03.06.2026 புதன் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்டம் III ல் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டதுடன் இவர்களுக்கான முதலாம் கட்ட கொடுப்பனவான 400,000 ரூபாவிற்கான காசோலை தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ க.இளங்குமரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு இவ்வமைச்சினால் கட்டம் I ல் 29 வீடுகளும் கட்டம் II ல் 34 வீடுகளும் வழங்கப்பட்டு கட்டுமானபணிகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டமானது இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கியுள்ள உடன்படிக்கையின்படி, பின்வரும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நேரடியாகப் பூர்த்தி செய்கிறது: இலக்கு 1 (வறுமை ஒழிப்பு - No Poverty): விளிம்புநிலை மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சொத்துரிமை மற்றும் உறைவிடத்தை வழங்கி வறுமையிலிருந்து மீட்டல். இலக்கு 6 (தூய நீரும் சுகாதாரமும் - Clean Water and Sanitation): வீடமைப்புடன் இணைந்ததாக நீர் வழங்கல் அமைச்சினால் சுத்தமான குடிநீர் மற்றும் முறையான சுகாதார வசதிகள் உறுதி செய்யப்படுதல். இலக்கு 11 (நிலையான நகரங்களும் சமூகங்களும் - Sustainable Cities and Communities): நலிவடைந்த சமூகங்கள் பாதுகாப்பான, மலிவுவிலையிலான மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளைப் பெறுவதை உறுதி செய்தல். தற்போதைய சவாலான பொருளாதாரச் சூழ்நிலையிலும், கிராமிய உட்கட்டமைப்பு மற்றும் அடிமட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் தனது தேசியக் கொள்கையில் அரசாங்கம் உறுதியாக பயணிக்கிறது என்பதை இச்செயற்றிட்டம் வெளிப்படுத்துகிறது. 
 WhatsApp Image 2026 06 04 at 9.56.19 AM WhatsApp Image 2026 06 04 at 9.56.21 AM 

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top