"அழகான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான  சுற்றுலாத்தளம்"  என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் தேசிய நிகழ்விற்கமைய, தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் J/301 கோவில் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் லிகோரியார் தேவாலயத்தை அண்மித்த கடற்கரைப் பிரதேசமும் J/ 299- தனங்கிளப்பு கிராம அலுவலர் பிரிவில் சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த கடற்கரை பிரதேசமும் சிரமதானம் மூலம் துப்புரவாக்கப்பட்டது. லிகோரியார் தேவாலயத்திற்கு அண்மையான கடற்கரையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டு சுற்றுலாத்துறைக்கு முதன்மையான விடயமாக காணப்படும் இலங்கையின் அழகிய நீண்ட கடற்கரையை தூய்மையானதாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய லிகோரியார் தேவாலய பங்குத்தந்தை, தென்மராட்சி பிரதேச செயலாளர் F.C சத்தியசோதி அவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி நகர சபையின் வட்டார உறுப்பினர், பொதுச் சுகாதார பரிசோதகர்,பிரஜாசக்தி தலைவர், சாவகச்சேரி நகர சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பொலிஸ் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்."அழகான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான  சுற்றுலாத்தளம்"  என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் தேசிய நிகழ்விற்கமைய, தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் J/301 கோவில் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் லிகோரியார் தேவாலயத்தை அண்மித்த கடற்கரைப் பிரதேசமும் J/ 299- தனங்கிளப்பு கிராம அலுவலர் பிரிவில் சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த கடற்கரை பிரதேசமும் சிரமதானம் மூலம் துப்புரவாக்கப்பட்டது. லிகோரியார் தேவாலயத்திற்கு அண்மையான கடற்கரையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டு சுற்றுலாத்துறைக்கு முதன்மையான விடயமாக காணப்படும் இலங்கையின் அழகிய நீண்ட கடற்கரையை தூய்மையானதாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய லிகோரியார் தேவாலய பங்குத்தந்தை, தென்மராட்சி பிரதேச செயலாளர் F.C சத்தியசோதி அவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி நகர சபையின் வட்டார உறுப்பினர், பொதுச் சுகாதார பரிசோதகர்,பிரஜாசக்தி தலைவர், சாவகச்சேரி நகர சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பொலிஸ் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையான கடற்கரையில் இடம் பெற்ற நிகழ்வில் தனங்கிளப்பு பொதுமக்கள், பொதுச் சுகாதார பரிசோதகர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2026 05 23 at 3.14.25 PM 1 WhatsApp Image 2026 05 23 at 3.14.29 PM 1

 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top