"நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" என்னும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு இணங்க 2021 ஆம் ஆண்டிற்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை 8.45 மணிக்கு இடம்பெற்றது.கோவிட் 19 காரணமாக மேற்படி கடமை செயற்பாடுகள் பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்பட்டன .மதிப்புக்குரிய பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.இவ் நிகழ்வினை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.பிரதேச செயலாளர் திருமதி சு. உஷா அவர்களின் வாழ்த்து செய்தியினை தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் , நிர்வாக உத்தியோகத்தர்,நிர்வாக கிராம அலுவலகர், முகாமையாளர் -சமுர்த்தி தலைமை பீடம் ஆகியோர் வாழ்த்து செய்தியினை வழங்கினர். பொதுசுகாதாரப் பரிசோதகரினால் கோவிட் 19 தொடர்பான விழிப்புணர்வு செய்தி வழங்கப்பட்டது. பிரதேச செயலாளர் அவர்கள் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர் கொண்ட போதும் தென்மராட்சி பிரதேச மக்களிற்காக சேவையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களும் தனது நன்றிகளை தெரிவித்ததுடன் இனிவரும் காலங்களில் பொது மக்களிற்கான சேவையை நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் ஆற்ற வேண்டும் என்பதனை தெரிவித்தார்.

134167489 842498783271088 7418872264674343060 n
133491880 842498946604405 8837171332193829256 n
134064021 842500606604239 2067211390278019453 o

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top