தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கு Business Clinic program ஆனது 17.07.2026ம் திகதி தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலக கணக்காளர் அ.கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சி.ஜெயஸ்ரீ அம்மையார், மாவட்ட செயலக சிறுகைத்தொழில் அபிவிருத்தி பிரிவு உதவி பணிப்பாளர் ச.சசீபன், வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் தலைவர் ஜஸ்மின் அம்மையார், மத்திய வங்கி- கிளிநொச்சி,மக்கள் வங்கி- சாவகச்சேரி, இலங்கை வங்கி-சாவகச்சேரி,commercial bank- Chavakachcheri, HNB, NSB, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை,தொழில்துறை திணைக்களம்,சுகாதார வைத்திய அதிகாரி-சாவகச்சேரி, பிரதேச சபை, நகர சபை, மின்சார சபை, விதாத வளநிலையம்,கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை, provincial industry மற்றும் Business Registration officer ஆகிய சேவை வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் 35 ற்கும் மேற்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்களும் 75 தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வியாபாரப்பதிவு எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய நடைமுறைகளும், முயற்சியாளர்கள் தொழில் ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த வழிகாட்டல்களும், வங்கிக் கடன் குறித்த ஆலோசனைகளும் விபரங்களும் தொழில் முயற்சியாளர்களுக்கு விவரிக்கப்பட்டது.

750290153 2259357781585174 3878381853365936355 n 751871794 2259358014918484 8856673180402584140 n 
 749952734 2259358661585086 5216477413777467707 n  750585943 2259358141585138 617715087362881395 n

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top