2026ம் ஆண்டின் இரண்டாவது கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் கடந்த 27.05.2026
புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் திருமதி.வி.பிறேமதாஸ் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர், திரு. எஸ்.ரமேஸ்குமார் மாவட்டச் செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதித்திட்டமிடல்பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்திதலைமைப்பீட முகாமையாளர், பிரதேசசெயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராமஅலுவலர்கள், கிராமமட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் தலைமை உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தியோகத்தர் அனைவருக்கும் நன்றிகளைக் கூறிக்கொண்டதுடன் உத்தியோகத்தர்கள் அனைவரும் வினைத்திறனுடன் வேலை செய்வதனால் எமக்குக் கிடக்கின்ற கணக்காய்வு விசாரணைகளை குறைத்துக் கொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இக் கூட்டத்தில் பிரதம உள்ளகக்கணக்காய்வாளரால் மாவட்டச் செயலக கால அட்டவணையின்படி இக் கூட்டத்தினை நடத்தியமைக்காக பிரதேச செயலாளருக்கு நன்றிகளைக் தெரிவித்ததுடன், புதிய பிரதேச செயலாளர் கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் கணக்காய்வு அவதானிப்புக்கள் குறைந்துள்ளதுடன் இவ்வாண்டு முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இறுதியாக தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் குறிப்பிடுகையில், குறிப்பிட்ட காலாண்டுக்கான கணக்காய்வு அவதானிப்புக்களுக்கான பதில்கள் இம்முறை திருப்திகரமானதாகவும் இவ்வாண்டு முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
 
 
 WhatsApp Image 2026 05 27 at 5.03.44 PM

 WhatsApp Image 2026 05 27 at 5.03.44 PM 1

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top