சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சர்வதேச மகளீர் தின விழாவானது கொடிகாமம் வங்கிக்குட்பட்ட யா/கொடிகாமம் அரசினர் வித்தியாலயத்தில் 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு. F.C. சத்தியசோதி தலைமையில் ஆரம்பமாகியது . இவ் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மேலதிக மாவட்ட செயலாளர் மதிப்புக்குரிய க.சிவகரன் அவர்களும் விருந்தினர்களாக பாடசாலை அதிபர் திரு.க. கோடீஸ்வரன் மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் திருமதி.ஆ.உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்து மங்கள விளக்கேற்றலினை தொடர்ந்து இறைவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து வரவேற்புரையினை சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி.ஜெ.வசந்தி அவர்களும் தலைமையுரையினை பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்களும் விருந்தினர் உரையினை முகாமையாளர் திருமதி.ஆ.உமாதேவி அவர்களும் அதிபர் திரு.க.கோடீஸ்வரன் அவர்களும் பிரதம விருந்தினர் உரையினை மேலதிக மாவட்ட செயலாளர் திரு.க.சிவகரன் அவர்களும் நிகழ்த்தினார்கள். பிரதம விருந்தினர் தனது உரையில் பெண்கள் சுய தொழில்களை மேற்கொள்வதன் மூலம் தமது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த முடியும் என கூறினார். அத்துடன் மகளீரிற்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு கலந்து கொண்டிருக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்தது விளங்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தொடர்ந்து மகளீரிற்கான விளையாட்டு நிகழ்வுகள் மைதானத்தில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றியாளர்களிற்கான பரிசில் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து கொடிகாமம் வங்கிக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் ( புத்தகப்பை) வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.
![]() |
|
















