இலவச கண் சத்திரசிகிச்சை முகாம். தென்மராட்சி பிரதேச செயலகம், நல்லூர் கிங்டம் லயன்ஸ் கழகம், தென்மராட்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன STS வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய இலவச கண் சத்திரசிகிச்சை முகாம் 01.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை STS வைத்தியசாலையில் நடைபெற்றது.கடந்த 08.02.2026 அன்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் அவசியம் கண்புரை சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டியவர்களாக இனங்காணப்பட்ட 35 நோயாளிகளுக்கும் மேலதிகமாக முன்பு இனங்காணப்பட்ட 7 நோயாளிகளுக்குமாக 42 பேருக்கு மேற்குறித்த சத்திரசிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டது.இவர்களுள் பலர் தமக்கு பார்வை குறைபாடு இருப்பதை அறிந்திருந்த போதிலும் வைத்தியசாலைக்கு சென்றிருக்கவில்லை. நல்லூர் கிங்டம் லயன்ஸ் கழகத்தின் கோரிக்கைக்கு அமைவாக பிரதேச செயலாளரினால் கிராம அலுவலர்கள் ஊடாக பயனாளிகள் இனங்காணப்பட்டு கண்புரை சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு இலவசமாக கண்புரை சத்திர சிகிச்சையினை Dr.S.T.சந்திரகுமார் அவர்கள் தனது STS வைத்தியசாலை ஊடாக வழங்கியிருந்தார் .
 WhatsApp Image 2026 03 03 at 10.15.49 WhatsApp Image 2026 03 03 at 10.15.50 1 

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top