தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் பொதுச்சபை நிறைவேற்றுக்குழுத் தெரிவுக் கூட்டமானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன் 11.02.2026 புதன்கிழமை மாலை 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலர், கணக்காளர், தலைமைப்பீட முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவராக செல்வி.சதாசிவம் நிலூஷிகா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
![]() |
![]() |

















