தென்மராட்சி பிரதேச செயலகம், நல்லூர் கிங்டம் லயன்ஸ் கழகம், தென்மராட்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன STS வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய கண்பரிசோதனை முகாமானது 08.02.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்களும் லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் Dr.K.பத்மநாதன் அவர்களும், மாவட்ட கணனி தொழிநுட்ப ஆலோசகர், Dr.S.மனோகரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர். 230 வரையிலான பயனாளிகள் பங்குபெற்றி பயன்பெற்றதுடன் விசேடமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள தேவையுள்ளவர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களுக்கான சிகிச்சையினை அவசியத்தன்மையின் அடிப்படையில் நல்லூர் கிங்டம் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் இலவசமாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது இந் நிகழ்வின் விசேட அம்சமாகும்.
![]() |
![]() |
![]() |


















