சோபகிருது வருட தமிழ் புத்தாண்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்று நண்பகல் 12 மணியவில் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது .பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்கள் மங்கலவிளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.தொடர்ந்து பதவி நிலை உத்தியோகத்தர்கள் மங்கல விளக்கேற்றினர். இவ் நிகழ்வினை தொடர்ந்து பதவி நிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளருக்கு கைவிசேடத்தை வழங்கினர். அதனைத்தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்களினால் உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |
|
![]() |
![]() |
![]() |
|





















