|
தென்மராட்சி பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழா-2020, 28/08/2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி சு .உஷா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்திராக வடமாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் திரு பா.முகுந்தன் ,சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு.க .விஜிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பிரதேச மட்ட ரீதியாக CRC விளையாட்டுக் கழகமானது முதலாம் இடத்தையும், கச்சாய் கலைமகள் விளையாட்டுக் கழகமானது இரண்டாம் இடத்தையும் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகமானது மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. தென்மராட்சி பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்டத்தில் சாதனை புரிந்த புவிதரன் (கோல் ஊன்றி பாய்தல் ) விதுஷன் (400m ஓட்டம் ) ஆகியோரும் இன் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். |
|||
![]() |
|
![]() |
|

















