சனாதிபதி நிதியத்தின் நடவடிக்கைகளை பிரதேச மட்டம் வரை பன்முகப்படுத்தல் திட்டத்தின் மூலம் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் முதன் முறையாக இருதய சத்திர சிகிச்சைக்கான மருத்துவ உதவி கொடுப்பனவாக இரண்டுபேருக்கு தலா 250,000.00 ரூபா வீதம் காசோலையினை 20.06.2025 அன்று வழங்கி வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலாளர் திருமதி.சு.உஷா அவர்களும் கணக்காளர் திரு.இ.றமணன் அவர்களும் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் சமூகசேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
















