தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2025-2027 காலப்பகுதியில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் மேற்கொள்ளவுள்ள சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு பிரதேச செயலாளர் தலைமையில் 03.01.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் ,சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் வளவாளராக சமுர்த்தி திணைக்கள நுண்நிதி மற்றும் CBOபிரிவு மாவட்ட முகாமையாளர் திரு.T.யோகேந்திரன் அவர்கள் சிறந்த முறையில் விளக்கமளித்தார்.
















