"கிளீன் ஸ்ரீ லங்கா" - Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றியதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த அனைவரையும் நினைவுகூரும் முகமாக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து சனாதிபதி செயலகத்தில் இருந்து ஒளிபரப்பப்படும் Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சி திட்டதை ஆரம்பித்து வைக்கும் தேசிய நிகழ்வுடன் பதவி நிலை உத்தியோகத்தர்கள் அனைத்து கிராம மட்ட அபிவிருத்தி உத்தியாகத்தர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் அனைத்து பிரதேச செயலக உத்தியாகத்தர்கள் கலந்துகொண்டு சத்யப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்களின் வாழ்த்து செய்தி இடம்பெற்றது.
![]() |

















