பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான கருத்தரங்கு தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 30.07.2024 ஆம் திகதி இடம்பெற்றது.இக்கருத்தரங்கில் பாதுகாப்பான முறையில் குறிப்பாக பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லுதல் மற்றும் இடர்பாடுகளுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் பற்றி கூறப்பட்டது. இவ்விழிப்புணர்வின் வளவாளராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து தமது கருத்துக்களை வழங்கினார்.
















