அஸ்வசும கொடுப்பனவிற்கான 2ம் கட்ட விண்ணப்பங்களை மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் கோரப்பட்டுள்ளன. 1ம் கட்டத் தெரிவின் போது விண்ணப்பங்கள் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் 1ம் கட்டத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, நலன்புரி நன்மைகள் சபையினால் எண்ணீட்டுக்கு உட்படுத்தப்பட்டு, தரவுத்தளத்தில் விபரங்கள் உட்சேர்க்கப்படாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தாங்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவராயின், நலன்புரி நன்மைகள் சபையின் இணையத்தளம் ஊடாக அல்லது தங்கள் கிராம அலுவலர் பிரிவில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக 2ஆம் கட்ட நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுக்கு மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவும். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் தேசிய அடையாள அட்டை அவசியமாகும்.















