கிளிநொச்சி மாவட்ட உளநல சமூகத்தின் அனுசரணையுடன் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களால் கடந்த 27.10.2023 அன்று வரணி கலாச்சார மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த மாதர்சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், இளைஞர் கழகம் மற்றும் பெண்கள் விவகார அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான பால்நிலை உணர் திறன், பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்துதல் என்னும் தலைப்பின் கீழ் விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது.இதில் வளவாளர்களாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் உளவளத்துனை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
![]() |
![]() |

















